News August 6, 2025
மின்கம்பம் உடைந்துள்ளதா? உடனே CALL பண்ணுங்க

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை கண்டால் அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு சென்னையில் உள்ள தலைமை மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தொடர்புக்கு 94987-94987 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News November 11, 2025
சென்னை எம்டிசிக்கு தேசிய அளவில் விருது

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) தேசிய அளவில் “சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு” என்ற விருதை பெற்றுள்ளது. மின்சார மினிபஸ்கள் அறிமுகம், பெண்களுக்கு இலவசப் பயண திட்டம், டிஜிட்டல் டிக்கெட் முறை, மற்றும் 660க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சேவை போன்ற அம்சங்கள் இதற்குக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விருது, சென்னையின் பொதுப் போக்குவரத்து தரத்தை உயர்த்தியுள்ளது.
News November 11, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 11, 2025
சென்னை உஷார் நிலை தீவிர கண்காணிப்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்ந்து சென்னையில் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மாலை கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சென்னை புறநகரில் இன்று இரவு முதல் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக விமான நிலையம் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்


