News November 17, 2024
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் 19.11.2024 அன்று மாலை 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 17, 2025
பெரம்பலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <
News December 17, 2025
பெரம்பலூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், 19.12.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளோர் https://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 04328-296352-ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
பெரம்பலூர்: கிளைச் சிறையில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் கிளைச் சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, பெரம்பலூர் கிளைச் சிறையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் நேற்று (டிச.16) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


