News August 24, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆக.23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 22, 2026
நெல்லை 122 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 122 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ். துப்புரவு மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம். விதிமுறைகளை மீறும் அமைப்புகள் மீது சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் கடும் சட்ட நடவடிக்கை என நெல்லை துணை மண்டல இ.எஸ்.ஐ இணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்தார்.
News January 22, 2026
நெல்லை: அரசிற்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி

நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் ரூ.7 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு ஒரு ஆண்டுகள் பின்பு திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்னும் செயல்படாமல் உள்ளது. எனவே உடனடியாக மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என்றால் ஒரு மாதத்தில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News January 22, 2026
மாநகர பகுதிகளில் இரவு ரோந்துப்பணி அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர காவல்துறை, இன்று {ஜனவரி.21} இரவு ரோந்துப்பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெயரை, அறிவித்துள்ளது. அதன்படி, டவுண் பகுதியில் மனோகரன், பேட்டையில் மாசானமுத்து, சந்திப்பில் நடராஜன், பாளையில் முருகன், மருத்துவக் கல்லூரி பகுதியில் கோபால கிருஷ்ணன், மேலப்பாளையத்தில் கணேசன், பெருமாள்புரத்தில் செந்தில்குமார் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.


