News January 10, 2025
மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சு போட்டி- கலெக்டர்

நெல்லை பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வரும் ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்குமாறு கலெக்டர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
நெல்லையில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

நெல்லையில் மாவட்ட மக்களே நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
கட்டணமில்லா எண் 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 9, 2025
நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News December 9, 2025
நெல்லை: அண்ணன் – தம்பிக்கு அரிவாள் வெட்டு

அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சகோதர்கள் விக்னேஷ் (30), சந்தோஷ் (26). இருவரும் நேற்று சேரன்மாதேவியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். டாஸ்மாக்கில் இருந்து இருவரும் கிளம்பும் போது ஒரு டூவீலரில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென விக்னேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றனர். இதை தடுக்க சென்ற சந்தோஷ்க்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் குறித்து சேரன்மாதேவி போலீஸார் விசாரிக்கின்றனர்.


