News August 7, 2024

மாட்டு வியாபாரியை கொல்ல முயன்ற கூலிப்படை கைது

image

கரூரை சேர்ந்தவர் பத்மநாபன்,மாட்டு வியாபாரி. இவர், பாலக்காடு அருகே உள்ள வாணியம்குளம் சந்தைக்கு, ஜூலை 11 காலை வந்தார்.அப்போது, மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி தப்பினர். அங்கிருந்தோர் அவரை மீட்டு திருச்சூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.விசாரணையில், கோவை சேர்ந்த சல்மான்கான்,22, அவரது சகோதரர் ஷாருக்கான், 21, முகமதுநாசர், 36, முகமது ரசியா, ராஜா, சையத் அஸ்ஹருதின் என்பது தெரியவந்தது.

Similar News

News December 9, 2025

குளித்தலை அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி

image

குளித்தலை அருகே, குமாரமங்கலம் தேவஸ்தானம் சாலையில், கிஷோர் குமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில், வந்து கொண்டிருக்கும் பொழுது மண் சறுக்கி, வேப்ப மரத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News December 8, 2025

கரூர்: அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

image

கரூர்: இன்று வடகிழக்கு பருவமழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அமராவதி ஆற்றில் 2000 கன அடி முதல் 3000 கன அடி வரை திறக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார். எனவே கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

News December 8, 2025

பாலவிடுதியில் வசமாக மாட்டிக் கொண்ட பெண்!

image

கரூர் மாவட்டம், பாலவிடுதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒருவர் விற்பனை செய்வதாக, பாலவிடுதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீசார் நேற்று இரவு நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது மாரியம்மாள் என்பவர் புகையிலை பொருள்களை விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!