News November 21, 2024
மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர்கள்

தாளவாடியில், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணியின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கு மாபெரும் பொது மருத்துவ முகாம் (ஆசனூர் மைராடா வளாகம்) அரேபாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை பார்வையிட்டனர். உடன் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் பங்கேற்றனர்.
Similar News
News November 18, 2025
சத்தியமங்கலம்: விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை

சத்தியமங்கலம் செண்பகநாயக்கர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்தார். தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
சத்தியமங்கலம்: விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை

சத்தியமங்கலம் செண்பகநாயக்கர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்தார். தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
ஈரோடு காவல்துறை எச்சரிக்கை!

ஆன்லைன் ஷாப்பிங்கின் போது உங்கள் பணப்பையைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பாதுகாப்பான, நம்பகமான தளங்களில் ஷாப்பிங் செய்யுங்கள், பொது வைஃபை இணைப்புகளைத் தவிர்க்கவும், மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது விளம்பரங்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர். மேலும் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 தொடர்பு கொள்ளவும்.


