News August 24, 2025
மருத்துவ பயனாளிகளுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மருத்துவ பயனாளிகளுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆணைக்கிணங்க பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், அன்னதானம் வழங்கினார். நிகழ்வில் கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News January 21, 2026
பெரம்பலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 21, 2026
பெரபலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இதுவரை 11, 650 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தெரிவித்தாா். மேலும் இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழ்நாட்டில் 1.1.2026 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வருகிற ஜன. 30 வரை நீட்டிப்பு செய்யப்படுவதால், மக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
News January 21, 2026
பெரம்பலூர்: கல்லூரி மாணவி தற்கொலை – சோகம்

பெரம்பலூர் மாவட்டம் வரகூர் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செம்மொழி(20). இவர் வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் செம்மொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து, தற்கொலைக்கான கரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.


