News August 10, 2025
மயிலாடுதுறை: விநாயகர் சதுர்த்தி – கலெக்டர் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார். நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு சிலை தயாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 8, 2025
மயிலாடுதுறை: உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வீட்டை அடித்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மற்றும் வருவாய் துறையினரை கண்டித்து வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க செயலாளர் பாலாஜி தலைமையில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் வழக்காடும் பணிகள் பாதிக்கப்பட்டது.
News November 8, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மாதாந்திர ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல் துறையில் இயங்கி வரும் வாகனங்களின் மாதாந்திர ஆய்வு எஸ்பி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காவல்துறை வாகனங்களை எஸ்பி நேரடி ஆய்வு மேற்கொண்டு வாகனங்களின் நிலை அவற்றில் பொருத்தப்பட்டுள்ள தொலைதொடர்பு சாதனங்கள் ஒளிரும் மின்விளக்குகள் ஆகியவற்றின் செயல் திறன் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பழுதுநீக்கும் கருவிகளை தணிக்கை செய்தார்.
News November 8, 2025
மயிலாடுதுறை அருகே பைக்கை திருடிய வாலிபர்!

சீனிவாசபுரம் மேலப்பட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் (31). சம்பவத்தன்று செல்போன் டெலிவரி செய்ய மயிலாடுதுறை தருமபுரம் சாலை குமரகட்டளை தெருவில் உள்ள வாடிக்கையாளர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. இதையடுத்து அவர் அளித்த புகாரின் பெயரில் மயிலாடுதுறை போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய கலைச்செல்வன்(37) என்பவரை கைது செய்தனர்.


