News November 19, 2025

மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விவரம்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் மழை குறைந்த காணப்பட்டது. தொடர்ந்து மாலைக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 40.20 மிமீ, செம்பனார்கோவிலில் 35.20 மிமீ, மயிலாடுதுறையில் 30.10மிமீ சீர்காழியில் 23மிமீ மழை பதிவாகியுள்ளது

Similar News

News January 18, 2026

மயிலாடுதுறை: உச்சத்தை தொட்ட விற்பனை – மக்கள் அதிர்ச்சி

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 43 டாஸ்மாக் மதுக்கடைகளும், நாகை மாவட்டத்தில் 52 டாஸ்மாக் மதுக்கடைகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களில் மட்டும் ரூ.15 கோடியே 21 லட்சத்து 11 ஆயிரத்து 720-க்கு மது விற்பனை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட ரூ.5.87 கோடி அதிகமாகும். இதுகுறித்து உங்க கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்!

News January 18, 2026

மயிலாடுதுறையில் அதிரடி காட்டிய போலீசார்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் சட்டவிரோத மதுபான கடத்தல் மற்றும் விற்பனை குறித்து, மாவட்ட காவல்துறையினர் பல்வேறு இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த மயிலாடுதுறை தெற்கு குமர கட்டளை தெருவை சேர்ந்த செந்தில் (52) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 810 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 18, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில், திருக்குறள் வார விழாவை முன்னிட்டு நாளை (ஜன.19) காலை 10:30 மணி அளவில், பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் குறல் ஒப்புவித்தல், குறல் சார்ந்த ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தங்களது ஆதார் அல்லது குடும்ப அட்டை நகலை சரி பார்ப்பிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!