News October 18, 2025
மயிலாடுதுறை மக்களே உஷாரா இருங்க!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
Similar News
News November 7, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு, தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News November 6, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2112 பேர் தேர்வு எழுத உள்ளனர்

டிஎன்யுஎஸ்ஆர்பி நடத்தும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு வருகிற 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1542 ஆண்கள் மற்றும் 570 பெண்கள் என மொத்தம் 2112 பேர் தேர்வு எழுத உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏவிசி கலைக்கல்லூரியில் ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் ஏவிசி பொறியியல் கல்லூரியில் பெண் விண்ணப்பதாரர்கள் என இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
News November 6, 2025
மயிலாடுதுறை: மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடியில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவர் தங்கம் விடுதியில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ சார்ந்தவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் மாணவர் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா, பாதுகாப்பு உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.


