News September 30, 2025
மயிலாடுதுறை: பட்டாசு விற்பனையாளர்களுக்கு பயிற்சி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று செவ்வாய்கிழமை (30.9.2025) பகல் 12:00 மணி அளவில் வெடிபொருள் சில்லறை விற்பனை உரிமையாளர்களுக்கு வெடி பொருட்கள் கையாளுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் அமைக்கப்படும் சில்லறை பட்டாசு விற்பனையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
Similar News
News December 9, 2025
மயிலாடுதுறை: மானியத்துடன் கடன் உதவி; ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்திக்கொள்ள தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் கீழ் ரூ.10 லட்சத்தில் 25% அல்லது 2 லட்சம் மானியத்துடன் தொழில் கடன் பெற பெண்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் <
News December 9, 2025
மயிலாடுதுறையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நாளை(டிச.11) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம். இதேபோல ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
மயிலாடுதுறையில் 22 பேர் கைது

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குனர்கள் உள்ளிட்ட ஊராட்சி துறை பணியாளர்கள் அரசுக்கு 11 அம்ச கோரிக்கை வைத்தனர். அதனையெடுத்து அதற்கு அரசானை வெளியிட சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு கொள்ளிடத்தில் இருந்து புறப்பட்ட தயாராக இருந்த 22 பேரை நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.


