News March 24, 2024

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் மாகேஸ்வர பூஜை

image

மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் மடத்தில் இன்று மாகேஸ்வர பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து குருமகா சன்னிதானத்துக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Similar News

News November 7, 2025

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் ரபி 2025 பருவத்தில் பயிரிடப்பட்ட வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்ய வரும் 28.2.2026 ஆம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை வாழைக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ. 3551.86 மரவள்ளிக்கு ரூ.2686.15 ஆகும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்

News November 7, 2025

மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு, தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

News November 6, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2112 பேர் தேர்வு எழுத உள்ளனர்

image

டிஎன்யுஎஸ்ஆர்பி நடத்தும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு வருகிற 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1542 ஆண்கள் மற்றும் 570 பெண்கள் என மொத்தம் 2112 பேர் தேர்வு எழுத உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏவிசி கலைக்கல்லூரியில் ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் ஏவிசி பொறியியல் கல்லூரியில் பெண் விண்ணப்பதாரர்கள் என இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

error: Content is protected !!