News April 9, 2024
மயிலாடுதுறை: காவலர்களுக்கு நீர்மோர் வழங்கல்

சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் சீர்காழி காவல் நிலையம் சார்பில் நாகேஸ்வரமுடையார் கோவில் சந்திப்பு கடைவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து அலுவல் பார்த்த போக்குவரத்து காவலர்கள் ஊர்க்காவல் படையினருக்கு வெயிலின் தாகத்தில் இருந்து காத்துக் கொள்ள சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களை இன்று வழங்கினார்.
Similar News
News December 10, 2025
மயிலாடுதுறை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு!

மயிலாடுதுறையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
மயிலாடுதுறை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

வட தமிழகம் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் காற்று வீசும் என்பதாலும், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவ கிராம மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது, என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 10, 2025
மயிலாடுதுறை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் பெய்த மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பா உள்ளிட்ட முக்கிய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதால், அறிவிப்பு செய்யப்பட்ட நிவாரணத் தொகையை விரைவில் வழங்க முன்வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.


