News May 4, 2024

மயிலாடுதுறை கடலோர பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து 1.5 மீட்டருக்கு கடல் அலை வீசக்கூடும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்கள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு

image

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (நவ.11) நடைபெற்றது. வாக்காளர் பதிவு அலுவலரால் நடத்தப்பட்ட இந்த வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 11, 2025

மயிலாடுதுறை வட்டத்தில் “உழவரைத் தேடி” முகாம்

image

மயிலாடுதுறை வட்டம் வரதம்பட்டு மற்றும் திருச்சிற்றம்பலம் கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் வருகிற (நவ.14) தேதி காலை 10:30 மணிக்கு உழவர் நலத்துறை திட்டத்தின் கீழ் “உழவரை தேடி” முகாம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

image

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பட்டமங்கலம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (நவ.11) நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சித்ரா ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

error: Content is protected !!