News October 11, 2025
மயிலாடுதுறை: இளைஞர்களுக்கு உதவித்தொகை!

மயிலாடுதுறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். கல்வித்தரத்தின்படி மாதம் ரூ.200 முதல் ரூ.1000 வரை தொகை வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தேவையான ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28.11.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
மயிலாடுதுறை: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி மயிலாடுதுறை மாவட்ட கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளும் இத்துறையால் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு வருகிற 30.11.2025-குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்யப்படாத படகுகள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
மயிலாடுதுறை முழுவதும் வெடிகுண்டு சோதனை

புதுடெல்லியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.பி உத்தரவின் படி, மயிலாடுதுறையில் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், ஆலயங்கள், கல்வி நிறுவனங்களில் வெடிகுண்டு கண்டறியும்/அகற்றும் படையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


