News October 17, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் நேற்று(அக்.16) இரவு 11 மணி முதல், இன்று(அக்.17) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மாதாந்திர ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல் துறையில் இயங்கி வரும் வாகனங்களின் மாதாந்திர ஆய்வு எஸ்பி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காவல்துறை வாகனங்களை எஸ்பி நேரடி ஆய்வு மேற்கொண்டு வாகனங்களின் நிலை அவற்றில் பொருத்தப்பட்டுள்ள தொலைதொடர்பு சாதனங்கள் ஒளிரும் மின்விளக்குகள் ஆகியவற்றின் செயல் திறன் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பழுதுநீக்கும் கருவிகளை தணிக்கை செய்தார்.
News November 8, 2025
மயிலாடுதுறை அருகே பைக்கை திருடிய வாலிபர்!

சீனிவாசபுரம் மேலப்பட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் (31). சம்பவத்தன்று செல்போன் டெலிவரி செய்ய மயிலாடுதுறை தருமபுரம் சாலை குமரகட்டளை தெருவில் உள்ள வாடிக்கையாளர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. இதையடுத்து அவர் அளித்த புகாரின் பெயரில் மயிலாடுதுறை போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய கலைச்செல்வன்(37) என்பவரை கைது செய்தனர்.
News November 8, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு, தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.


