News June 19, 2024
மயிலாடுதுறை அருகே பல இடங்களில் மின்தடை

சீர்காழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று இடி மின்னலுடன் சுமார் அரை மணி நேரம் மழைபெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் தென்னை மட்டைகள் விழுந்து பாதிப்பு ஏற்பட்ட பாதிப்பால் சட்டநாதபுரம், கொள்ளிடம், மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஐந்து மணி நேரம் வரை மின்வினியோகம் தடைப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
Similar News
News January 24, 2026
மயிலாடுதுறை எஸ்பி தலைமையில் உறுதிமொழி

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் தலைமையில் வாக்காளர் தினத்தை ஒட்டி நேற்று வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் அனைத்து நிலை காவல் அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
News January 24, 2026
மயிலாடுதுறை: அதிரடி காட்டிய அதிகாரிகள்

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சியில், நேற்று உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் மரு.பிரவீன் குமார் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.600 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
News January 24, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.


