News September 29, 2025

மயிலாடுதுறை: அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்!

image

மணல்மேடை சேர்ந்தவர் முருகன் 46). கண்டக்டராக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று சீர்காழி முதல் மணல்மேடு வரை செல்லும் அரசு பஸ்சில் பணியில் இருந்தார். இந்நிலையில் இதில் பயணியத்த ராஜேஷ் (33) என்பவரிடம் முருகன் பயணச்சீட்டு எடுக்க கூறிய நிலையில் ராஜேஷ் மறுத்து, கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் துறை ராஜேஸை கைது செய்தனர்.

Similar News

News November 13, 2025

மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News November 13, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள சம்பா தாளடி பயிர்களை, இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாக்க பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் நவம்பர் 15க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கான பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையாக ரூ.564ஐ அருகில் உள்ள பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் (4.11.2025) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிகள் வருகிறது. இதில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (13.11.2025) மயிலாடுதுறை நகராட்சி காவேரி நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!