News May 1, 2024
மயிலாடுதுறை:பாராட்டு விழாவில் வாழ்த்திய எம்எல்ஏ

சீர்காழி பகுதியில் சமூகநல செவிலியராக பணியாற்றிய தையல்நாயகி என்பவரின் பணி நிறைவு பாராட்டு விழா நிகழ்ச்சி இன்று சீர்காழியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சீர்காழி எம்எல்ஏ எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அவரது பணியை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News December 14, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், இதன் மூலம் உங்களது பணத்தை இழக்க நேரிடலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது. மேலும், பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
மயிலாடுதுறை: மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி பிரேமா. இருவருக்கும் சமீபகாலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது கோபமடைந்த ஆதித்யன் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதித்யனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.
News December 14, 2025
மயிலாடுதுறை: மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி பிரேமா. இருவருக்கும் சமீபகாலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது கோபமடைந்த ஆதித்யன் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதித்யனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.


