News November 11, 2024
மயானத்தில் செல்போன் வெளிச்சத்தில் உடல் அடக்கம்

மதுரை கிழக்கு தொகுதி யா.நரசிங்கத்தில், இறந்த ஒருவரை அடக்கம் செய்ய மயானத்திற்கு நேற்று(நவ.10) கொண்டு சென்றனர். அப்போது மின்சார விளக்குகள் இல்லாத காரணத்தால் செல்போன் வெளிச்சம் மூலம் அடக்கம் செய்துள்ளனர். அப்போது பல நாட்களாக மின்சாரம் இல்லாமல் இரவு நேரத்தில் அடக்கம் செய்ய வருபவர்கள் செல்போன் மூலமாக டார்ச் லைட் அடித்து உடல்களை அடக்கம் செய்து வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Similar News
News November 9, 2025
மதுரை: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட, மதுரை ஆரப்பாளையம்
கிருஷ்ணம்பாளையம் 1வது தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவர் மகன் கோவிந்தம் பிள்ளை, நீதிமன்ற
விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத காரணத்தால் தேடப்படும் குற்றவாளியாக, மதுரை கூடுதல் மகிளா நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
News November 9, 2025
தோப்பூரில் ஆய்வில் ஈடுபட்ட எம்.பி.க்கள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி தருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இன்று வரை அந்த மருத்துவமனைக்கான பணிகள் ஆரம்பிக்கவில்லை. இதனால், எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.பி வெங்கடேசன் இணைந்து இன்று அந்த இடத்திற்கு சென்று கருத்து தெரிவித்துள்ளனர். “மதுரை எய்ம்ஸ் 95% முடிந்தது என கூறப்படுகிறது, ஆனால் நாங்கள் தோப்பூர் தளத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் காணவில்லை” என பதிவிட்டுள்ளனர்.
News November 9, 2025
மதுரை: EB பில் அதிகம் வருதா??

மதுரை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <


