News June 3, 2024

மனைவி கழுத்தறுத்து கொலை: கணவன் தற்கொலை

image

சாத்தான்குளம் அருகே உள்ள கழுங்குவிலை கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகர், ஆசா தம்பதினர். இவர்களுக்கு இடையே நேற்று இரவு கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவர் பிரபாகர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 8, 2025

தாலி பாக்கியம் நிலைக்க இங்கே வழிபடுங்கள்

image

தசராவிற்கு புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அருகே, வட கரூரில் உள்ள காரைக்கால் அம்மையார் கல் மண்டப கோவில் அமைந்துள்ளது. அம்மையார் ஈசனிடம் பேய் உருவம் வேண்டியது இந்த ஸ்தலத்தில் என்பது ஐதீகம். காரைக்காலில் நடப்பது போல இங்கும் ஆனி மாதம் நடைபெறும்ஆனி மாத மாங்கனி திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும், தாலி பாக்கியம் நிலைத்திருக்கும் என நம்பப்படுகிறது.

News July 8, 2025

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகள் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெற உரிய படிவத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று ஜூலை-14-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்

News July 8, 2025

உடன்குடி அனல் மின் நிலையத்தில் காலிப் பணியிடங்கள்

image

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய 60 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு 96886 53470 என்ற எண்ணை காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். *வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!