News March 19, 2024
மனு அளிக்க மாற்று ஏற்பாடு செய்த கோவை மாநகராட்சி

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) பொதுமக்கள் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் மனுக்களை போட்டு செல்லலாம். பின்னர் அந்த மனுக்கள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 20, 2026
கோவை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

கோவை மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <
News January 20, 2026
கோவை: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News January 20, 2026
கோவை மாநகரில் அதிரடி மாற்றம்!

கோவை மாநகரில் பணிபுரிந்து வரும் 21 காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து சிட்டி போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிங்காநல்லூர், சரவணம்பட்டி, வெரைட்டி ஹால் ரோடு, பெரிய கடை வீதி, வடவள்ளி, கரும்புக்கடை, கட்டுப்பாட்டு அறை, குற்றப்பிரிவு உள்ளிட்ட 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


