News November 11, 2025

மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்

image

சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு, தென்மாவட்ட ஐயப்ப பக்தர்களின் பயண வசதிக்காக மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, நவம்பர் 20 முதல் ஜனவரி 15 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் மகாராஷ்டிரா, ஹஜூர் சாஹிப் நந்தெத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07111), மதுரை, திண்டுக்கல் வழியாக கொல்லம் செல்கிறது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

Similar News

News December 5, 2025

மதுரை மாநகராட்சி ஊழியர் வலிப்பு ஏற்பட்டு பலி.!

image

மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பிளம்பராக இருந்தவர் ராஜா 50. மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் பகுதி கழிவு நீர் கால்வாய் அருகே அவர் நடந்து சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 5, 2025

மதுரை அருகே பெண் தற்கொலையில் சந்தேகம்…!

image

வெள்ளலூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி அன்னக்கிளி(35). முத்துக்குமார் துபாயில் வேலை பார்த்து வருவதால் தனது மகள் முத்துலட்சுமி(10), சிவா(7) மற்றும் மாமியாருடன் அன்னக்கிளி வாசித்து வந்தார். அவர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார், உயிரிழப்புகான காரணம் குறித்து இன்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News December 5, 2025

JUSTIN திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு

image

திருப்பரங்குன்றம் விசாரணையை வரும் 10-ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில் வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு 12-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் வெள்ளிக்கிழமைக்கு பிறகு புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது என்று இருநீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

error: Content is protected !!