News January 9, 2025
மதுரை மாவட்டத்தின் இரவு ரோந்து காவலரின் எண்

மதுரை மாவட்டத்தில் இன்று இரவு (ஜனவரி 9) ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வழியாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
மதுரை: டூவீலர் மீது வேன் மோதி விபத்து; ஒருவர் பலி.!

திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியை சேர்த்த செல்வராஜ் மகன் கார்த்திக் 30. இவரும் இவரது நண்பர் தினேஷ்குமார் இருவரும் டூ வீலரில் பள்ளப்பட்டியில் இருந்து சோழவந்தான் நோக்கி வந்தனர். இடையில் கருப்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த ஈச்சர் வேன் இவர்கள் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். தினேஷ்குமார் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
News November 14, 2025
மதுரையில் புதிய காவல் நிலையம்

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட,முக்கிய ஒரு கிராமமாக இருந்து வருவது தான் மாடக்குளம்.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 71 வது வார்டாகிய இந்த பகுதியில்,பொன்மேனி, விராட்டிபத்து,கோச்சடை மற்றும் மாடக்குளம் ஆகிய பகுதிகளை அடக்கிய புதிய காவல் நிலையம் மாடக்குளம் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.விரைவில் காவல்துறையினரின் அன்றாட பணிகள் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 14, 2025
மதுரையில் டெலிகாலர் வேலை

மதுரையில் ராஜா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தில் டெலிகாலர் பணியிடத்திற்கு பல்வேறு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டள்ளது. இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.10,000 மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். வேலைக்கு விண்ணப்பிப்போர் இங்கு <


