News October 17, 2025
மதுரை மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் தர்ணா

மதுரை மாநகராட்சி சிறப்பு மாமன்ற கூட்டம் மதுரை மாநகராட்சி துணை மேயர் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் கூட்டம் முடிந்தும் வெளியேறாமல்,45 வது வார்டு கவுன்சிலர் சண்முகவள்ளி தனது வார்டில் கழிவுநீர் அதிகமாக செல்வதால் பலமுறை மாநகராட்சி இடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மின்விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையிலிலும் கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 15, 2025
மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

மதுரை மாவட்டத்தில் அண்ணா பேருந்து நிலையம், ஒத்தக்கடை, வண்டியூர் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.15) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
News November 14, 2025
மதுரை: டூவீலர் மீது வேன் மோதி விபத்து; ஒருவர் பலி.!

திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியை சேர்த்த செல்வராஜ் மகன் கார்த்திக் 30. இவரும் இவரது நண்பர் தினேஷ்குமார் இருவரும் டூ வீலரில் பள்ளப்பட்டியில் இருந்து சோழவந்தான் நோக்கி வந்தனர். இடையில் கருப்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த ஈச்சர் வேன் இவர்கள் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். தினேஷ்குமார் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
News November 14, 2025
மதுரையில் புதிய காவல் நிலையம்

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட,முக்கிய ஒரு கிராமமாக இருந்து வருவது தான் மாடக்குளம்.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 71 வது வார்டாகிய இந்த பகுதியில்,பொன்மேனி, விராட்டிபத்து,கோச்சடை மற்றும் மாடக்குளம் ஆகிய பகுதிகளை அடக்கிய புதிய காவல் நிலையம் மாடக்குளம் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.விரைவில் காவல்துறையினரின் அன்றாட பணிகள் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


