News August 24, 2025
மதுரை: புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க?

மதுரை மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், அதன் Bill-யை வைத்து சட்டப்படி மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் இழப்பீடு பெற முடியும். அல்லது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அதிகாரியை (94450-00335) அணுகலாம். SHARE பண்ணவும்
Similar News
News January 23, 2026
மதுரை: சிறுமியை திருமணம் செய்த கணவர் கைது

மதுரை, வண்டியூர் யாகப்பா நகரை சேர்ந்த வினோத்குமார் (32). சிறுமி ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வந்துள்ளார். இந்த தகவல் கிழக்கு ஒன்றிய ஊர்நல அலுவலர் அமுதாவுக்கு தெரியவர அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, போலீசார் போக்சோ சட்டத்தில் வினோத்தை நேற்று கைது செய்தனர்.
News January 22, 2026
மதுரை: 17 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்

மதுரை கோ.புதூரை சேர்ந்த வேல்முருகன் மகன் பாரத் (20), 17 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் கோ.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற போது சிறுமி 5 மாத கர்ப்பம் என தெரிந்தது. மதுரை மேற்கு ஊர் நல அலுவலர் பாலஜோதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் பாரத்தை இன்று கைது செய்தனர்.
News January 22, 2026
மதுரையில் ஒர் நாள் வேலை நிறுத்தம்

தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, பிப்.12 அன்று மதுரையில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதுகுறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜன.22-இல் மதுரையில் நடந்தது. இச்சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என இக்கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.


