News November 10, 2024
மதுரையில் கழுத்தறுத்து வாலிபர் படுகொலை!

மதுரை சத்திரப்பட்டி அருகே உள்ள ஒயின்ஷாப் பகுதியில் ஒரு வாலிபர் ஒருவர் இன்று(நவ.10) கொடூரமாக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாட்டிலை உடைத்து அவர் கழுத்தை அறுத்தது விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய சத்திரப்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் அருகில் நின்ற டூவீலர் சிவகங்கை மாவட்ட பதிவெண் என்பதால் இறந்த நபர் சிவகங்கையை சேர்ந்தவரா என போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News November 13, 2025
மதுரை: சிலிண்டர் ஏற்றி வந்த வேன் மோதி வாலிபர் பலி.!

ஆட்டுக்குளம் ஊராட்சி உலகநாதபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் வல்லரசு(26). இவர் நேற்றிரவு மேலூர் சிவகங்கை சாலையில் டூவீலரில் சென்ற போது பெருமாள்பட்டி அருகே எதிரே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த வேன் மீது மோதினார். இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ் விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 13, 2025
மதுரை: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை

மதுரை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <
News November 13, 2025
மதுரை: இலவச தையல் இயந்திரம் பெறலாம்

மதுரை மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள்கள் பலரும் ஒன்றிய, மாநில அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ளனர். அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தையல் இயந்திரம் பெற விரும்புவோர், நவ. 20ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


