News December 9, 2025

மதுரையில் ஒரே நாளில் 300 பேர் கைது

image

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாமல் முருக பக்தர்களை அவமதித்ததாக, தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. எழுமலையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.

Similar News

News January 25, 2026

மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் கிராமத்தில் உள்ள மாணிக்கவாசகர் கோயில் வளாகத்தில், வரும் 28.01.2026 அன்று காலை சுமார் 10 மணியளவில் வட்ட அளவிலான மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

News January 25, 2026

மதுரை மண்டலத்தில் பி.எப். குறைதீர் முகாம்

image

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) நிறுவனம் சார்பில், குறைதீர் முகாம் மதுரை மண்டலத்தில் ஜனவரி 27-இல் நடைபெறுகிறது. மதுரை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், பழனி, தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டக் கிளை அலுவலகங்களில் குறைதீர் முகாம் ஜன 27-ம் ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

News January 25, 2026

மதுரை: பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

image

திருமங்கலம் எஸ்ஐ பாஸ்கரன் நேற்று வேதக்குளம் பகுதியில் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அதில் சோனை கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து சுங்குராம் பட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(39), பாலகிருஷ்ணன்(51), செங்குளம் சக்திவேல்(56) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.10,000 மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!