News May 4, 2024
மதுரைக்கு விரைவில் 346 புதிய பேருந்துகள்

அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகம், மதுரை கோட்டத்திற்கு 2022-23, 2023-24ம் ஆண்டுகளில் 350 பஸ்கள் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 137 புதிய பஸ்கள் இயங்கி வருகின்றன. காலாவதியான 85 பஸ்கள் கழிக்கப்பட்டன . மேலும் 213 பஸ்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மதுரை நகருக்கான 133 தாழ்தள பஸ்களும் தயாராகின்றன. பஸ்கள் படிப்படியாக கழிக்கப்படும்” என்று கூறினார்
Similar News
News December 7, 2025
மதுரை: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
மேலூரில் மதுக் கடத்திய போலீஸ்காரர் கைது

மதுரை மாவட்டம் மேலூரில் சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் மணிக்குமார், எஸ்.ஐ., சின்னமந்தையன், ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் மது பாட்டில்கள் கடத்தியதாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ்காரர் பாண்டி குமார் என்பவரை கைது செய்து மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
மதுரையில் ரூ.36,680 கோடி முதலீடு: 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு

மதுரையில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்ற ‘TN Rising’ தொழில் முதலீட்டு மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,680 கோடி முதலீட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மேலூர் சிப்காட் தொழிற்பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.


