News November 17, 2024
மதுரைக்கு பஸ்ஸில் அழைத்து வரப்படுகிறார் கஸ்தூரி

பிராமண சமுதாய மாநாட்டில் தெலுங்கு சமுதாய மக்களை தவறாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்டார். மதுரையில் தாக்கலான இந்த வழக்கில் ஆஜராவதற்காக நாளை (நவ.18) மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு பேருந்தில் அழைத்து வரப்படுகிறார்.
Similar News
News December 15, 2025
மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (15.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
மதுரையில் இதுபோன்ற பல தூண்களை காணலாம் – அறநிலையத்துறை

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில், மதுரையின் பல மலைகள், சமணர் மலை, மேலூர் என பல இடங்களில் தூண் உள்ளது என அறநிலையதுறை கூறியுள்ளது. நாகமலை, பசுமலை, அழகர்மலை, சித்தர்மலையிலும் இதுபோன்ற தூண்களை காணலாம். மதுரையை சுற்றியுள்ள மலைகளில் இருக்கும் தூண்களின் படங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்ததுள்ளது. வரலாற்று ஆய்வாளர் சீனிவாசன் எழுதிய சமண தூண்கள் குறித்த புத்தகமும் சமர்ப்பிக்பட்டுள்ளது.
News December 15, 2025
மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மதுரை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. மல்லிகை வீதி,மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை, 70 அடி ரோடு, எல்லிஸ் நகர், தாமஸ் காலனி,பாரதியார் 1 -5 தெருக்கள், எஸ் பி ஐ காலனி,பொற்குடம், சத்தியமூர்த்தி நகர், அரசு போக்குவரத்து கழகம், அருண் நகர்,நேரு நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்ய்ப்படவுள்ளது.


