News August 6, 2024

மதிமுக நிர்வாகிகள் பலியான விபத்தில் லாரி டிரைவர் கைது

image

சென்னையில் இருந்து நேற்று(ஆக.,5) காரில் வந்த மதிமுக நிர்வாகிகள் பச்சமுத்து, அமிர்தராஜ், புலிசேகர் ஆகியோர் மேலூர் சுங்க சாவடி அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், முறையாக லாரியை நிறுத்தாததே விபத்துக்கு காரணம் என திருச்சி தொட்டியத்தை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமாரை(37) இன்று மேலூர் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 20, 2026

மதுரை: 10 th முடித்தால் மத்திய அரசு வழங்கும் ரூ.15,000 APPLY..

image

மதுரையில் 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் BE., முடித்தவர்களுக்கான தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நாளை (ஜன.21) காலை 9 மணிக்கு மூன்று மாவடியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். விவரங்களுக்கு: 9499055748 க்கு அழைக்கலாம்.

News January 20, 2026

மதுரை: இனி Whats App மூலம் ஆதார் அட்டை.!

image

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 20, 2026

மதுரை: வாயில் நுரை தள்ளி இளைஞர் உயிரிழப்பு

image

மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் மணி மகன் முத்துக்குமார்(40). திருமணமாகாத இவர், இஸ்திரி வேலை செய்து வந்தார். நேற்று மது போதையில் வரியேனந்தலில் உள்ள அவரது நண்பர் வீரணன் வீட்டிற்கு வந்து படுத்து தூங்கியுள்ளார். இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி அவர் இறந்து கிடந்தார். இது குறித்த சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!