News December 7, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. நேரில் அஞ்சலி

நாட்டிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர் சக்திவேலின் மறைவுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். J&K எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த சக்திவேலின் உடல் சொந்த ஊரான திருத்தணிக்கு கொண்டு வரப்பட்டு <<18491316>>ராணுவ மரியாதையுடன் அடக்கம்<<>> செய்யப்பட்டது. அரக்கோணம் MP ஜெகத்ரட்சகன் சக்திவேலின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். சக்திவேலின் நண்பர்கள் அவரது குடும்பத்தினருக்கு இன்று நேரில் ஆறுதல் கூறினர்.
Similar News
News January 21, 2026
யானை கழிவில் இருந்து சுவையான காபி!

உலகின் மிக அரிய காபியான Black Ivory coffee மிகவும் சுவையாக இருப்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த காபி தாயாரிக்கப்படும் தாய்லாந்தில், யானைகளுக்கு Arabica காபி செர்ரிகள் வழங்கப்பட்டு, பின்னர் அவற்றின் கழிவுகளில் இருந்து காபி விதைகள் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்து வறுத்து காபி தயாரிக்கப்படுகிறது. யானைகளின் குடலில் உள்ள பாக்டீரியா அதன் கசப்பு தன்மையை குறைக்க உதவுகின்றன.
News January 21, 2026
30 நிமிடம் நடந்தால் இவ்வளவு நன்மைகளா?

நடப்பது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது. மேலும் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்க உதவுவதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். தினமும் 8,000 – 10,000 அடிகள் நடப்பதன் மூலம் 400 – 500 கலோரிகளை எரிக்க முடியும். காலை, மதியம், மாலை என்று பிரித்துக்கூட 30 நிமிடங்கள் நடக்கலாமாம். ஆனால் வழக்கத்தைவிட சற்று வேகமாக நடப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவுமாம்.
News January 21, 2026
14 மாவட்டங்களில் புதிய டைட்டில் பூங்காக்கள்

நேற்று சட்டபேரவையில் ஆளுநர் ரவி உரையில், தமிழ்நாட்டில் மேலும் 14 மாவட்டங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாவட்டங்கள்: மதுரை, திருச்சி, ஓசூர், காரைக்குடி, விருதுநகர், நெல்லை, குமரி, ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை கரூர், ஊட்டி, நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகியவை. ஏற்கெனவே 7 மாவட்டங்களில் டைடல் பூங்கா நிறுவப்பட்டுள்ளது.


