News October 10, 2024
மக்கள் தொடர்பு முகாம்: 45 மனுக்கள் பெறப்பட்டன

அக்டோபர் மாதத்திற்கான மக்கள் தொடர்பு முகாம், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள மேல்ஒட்டிவாக்கம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 45 மனுக்கள் பெறப்பட்டன. பின், மனுக்கள் தீர்வு காணப்பட்டு 162 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கி சிறப்பித்தார்.
Similar News
News November 12, 2025
காஞ்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

காஞ்சி மக்களே, தமிழக அரசு தாட்கோ மூலம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News November 12, 2025
காஞ்சிபுரத்தில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலையத்தில் இன்று (நவ.12) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் கீழம்பி, பள்ளம்பி, ஆட்டோநகர், ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு, துலக்கம், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும் என்று காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பொறியாளர் எஸ். பாண்டியராஜன் கூறியுள்ளார்.
News November 12, 2025
காஞ்சி: ஓடும் பேருந்தில் 18 பவுன் நகை கொள்ளை!

வண்டலூர், மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் மனைவி பிரியா (30) தனது 9 வயது மகனுடன் கடந்த 1ம் தேதி வேலூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். காஞ்சி அருகே வந்தபோது, அவரிடம் இருந்த 18 சவரன் நகை காணாமல் போயுள்ளது. பிரியா அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், திருச்சியை சேர்ந்த காசி (30) என்பவரை கைது செய்தனர். அவர் வெளி சந்தையில் 18 லட்சத்துக்கு நகையை விற்றது தெரியவந்தது.


