News October 10, 2024

மக்கள் தொடர்பு முகாம்: 45 மனுக்கள் பெறப்பட்டன

image

அக்டோபர் மாதத்திற்கான மக்கள் தொடர்பு முகாம், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள மேல்ஒட்டிவாக்கம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 45 மனுக்கள் பெறப்பட்டன. பின், மனுக்கள் தீர்வு காணப்பட்டு 162 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கி சிறப்பித்தார்.

Similar News

News December 9, 2025

காஞ்சிபுரம்: ரேஷன் கார்டில் பிரச்னையா? கலெக்டர் அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிச.13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, சிங்காடிவாக்கம், மானாம்பதி, ஊத்துக்காடு, காட்ராம்பாக்கம், வளையகரணை ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும். இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

காஞ்சி மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

காஞ்சி பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். *தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News December 9, 2025

காஞ்சி: லஞ்சம் கேட்டால் உடனே CALL

image

காஞ்சிபுரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27237139) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!