News August 19, 2024
மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர், சாலை வசதி, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 755 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.
Similar News
News January 13, 2026
மூலனூர் அருகே விபத்து

மூலனூர் அருகே உள்ள நத்தபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் குட்டியப்ப கவுண்டர். இவர் தனது தோட்டத்திலிருந்து வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 13, 2026
பொங்கல் பரிசு: திருப்பூர் மக்களே உஷார்

திருப்பூர் மக்களே, பொங்கலை முன்னிட்டு பரிசு வழங்குவதாக What’s App-ல் பரவும் தகவல்கள் போலியானவை என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இத்தகவல்களில் உள்ள இணைப்புகளை பகிரச் சொல்லி, பரிசு தொகை வழங்குவதாக கூறி மோசடி நடக்கிறது. இவை பண மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் அதை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
News January 13, 2026
பாதயாத்திரையில் சோகம்: திருப்பூர் பெண் பலி

திருப்பூரைச் சேர்ந்த சத்யா (57) என்பவர், பழனி முருகனை தரிசிக்கத் திருப்பூரில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டார். நேற்று பழனி – தாராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


