News November 19, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 200 மனுக்கள் 

image

நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வங்கி கடன் உதவி தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அணுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 15, 2025

நாகை: மழை ஓய்ந்தும் வயல்களில் வடியாத மழைநீர்

image

நாகை மாவட்டத்தில் கனமழை, புயல் காரணமாக 1.62 லட்சம் ஏக்கருக்கு அதிகமான சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மழை ஓய்ந்து 10 நாட்களுக்கு மேலாகியும், கீழப்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தேங்கியுள்ள நீர் வடியாததால், சுமார் 750 ஏக்கர் பயிர்கள் முற்றிலும் அழுகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

News December 15, 2025

நாகை: வரி செலுத்துவது இனி ஈஸி!

image

நாகை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே<> https://vptax.tnrd.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News December 15, 2025

நாகை: ரூ.1000 வரலையா இத பண்ணுங்க!

image

நாகை மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1.இங்கு <>கிளிக்<<>> செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3.ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!