News July 9, 2024
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் 11.07.2024 முதல் 22.08.2024 வரை 256 கிராம ஊராட்சிகளில் 54 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தை 11.07.2024 அன்று முதலமைச்சர் தமிழகம் முழுவதும் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, குன்றத்தூர் வட்டம் கோவூர் ஊராட்சியில் தனலட்சுமி மஹாலில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் முகாமை தொடங்கி வைக்கிறார் என மாவட்ட ஆட்சியர் தெரவித்துள்ளார்.
Similar News
News July 11, 2025
கிராம உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பம்

திருப்பெரும்புதூர் வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் டாட் என்ஐசி டாட் இன் என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News July 10, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
காஞ்சியிலிருந்து சிறப்பு பேருந்துகள்

இன்று ஜூலை 10ஆனி மாத பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரத்திலிருந்து தி.மழைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக காஞ்சிபுரம் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பயணியர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் திரளான பக்தர்கள் நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.