News June 3, 2024
மக்களுக்கு உபயோகமில்லாத ATM மிஷின்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 10க்கும் மேற்பட்ட ATM மிஷின்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த ATM மிஷின்களால் மக்களுக்கு எந்தவித உபயோகமும் இல்லாமல் இருந்து வருகிறது. அனைத்து ATM மிஷின்களிலும் பணம் இல்லாமல் இருப்பதும் பழுதாகி இருப்பதாகவே உள்ளது. ஒவ்வொரு ATM மிஷனிலும் மக்கள் ஏறி இறங்கி பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் வருகிறார்கள். வங்கியில் புகார் செய்தாலும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
Similar News
News July 7, 2025
அஜித் சிபிஐ வழக்கு – அரசிதழில் வெளியீடு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், அந்த சிபிஐ வழக்கை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.
News July 7, 2025
சிவகங்கை: சொந்த ஊரில் அரசு வேலை (1/1)

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகங்கைக்கு 46 காலிப் பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும்.இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்:ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண்.<<16974387>>மேலும் அறிய.<<>>
News July 7, 2025
சிவகங்கை: சொந்த ஊரில் அரசு வேலை (1/2)

சிவகங்கை மாவட்டத்தில் 46 கிராம உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️விண்ணப்த்தாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.