News August 6, 2024
மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024ஆம் ஆண்டிற்கு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். மேலும் நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும், சேர்க்கை மேற்கொள்ள ஆகஸ்ட் 16ஆம் தேதி கடைசி நாள் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
திருச்சி: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

சோமரசம்பேட்டை அடுத்த தேனாச்சிகாட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (24). இவரது மனைவி பிரபாவதி (21). இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வீட்டில் பொங்கல் வைப்பது தொடர்பாக கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் கோவிந்தராஜ் தனது மனைவியை கடுமையாக திட்டியதில் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
திருச்சி: மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை

காட்டுப்புத்தூர் அடுத்த சூரம்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (55). இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், அவர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விரக்தியில் ரவி வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்ததில், கரூர் அரசு மருத்துவமனையில் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
திருச்சி: விரைவு ரயில் நின்று செல்லும் என அறிவிப்பு

சோழன் விரைவு இரயில் திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பை ஜன.15-ம் தேதி ஒன்றிய இரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், “விரைவில் திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நின்று செல்லும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக திருச்சி எம்.பி துரை வைகோ இன்று தெரிவித்துள்ளார்.


