News August 21, 2024

போலீஸ் வேலை வாங்கி தருவதாக மோசடி

image

மானாமதுரை சிப்காட் அருகே உள்ள ராஜேந்திரன் நகரில் வசித்து வருபவர் அர்ச்சுனன்(24). இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள அண்ணாநகரில் வசித்து வரும் சேத்ரோ என்ற இளைஞர் தான் போலீஸ் என்று கூறி போலி அடையாள அட்டையை காட்டி ரூபாய் 28 ஆயிரத்தை ஏமாற்றியுள்ளார். இவரை மானாமதுரை சிப்காட் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 21, 2026

சிவகங்கையில் இன்று பல்வேறு இடங்களில் மின்தடை.!

image

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், எஸ்.புதூர், மானாமதுரை, இடையமேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட துணைமின் நிலையங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜன.21) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என, மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். SHARE IT..

News January 21, 2026

சிவகங்கை: வாக்கு செலுத்துவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

image

சிவகங்கை, வாக்காளர் திருத்த பணி வருகின்ற ஜன. 30ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் மற்றும் பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கலாம்.

News January 20, 2026

சிவகங்கை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க

error: Content is protected !!