News May 17, 2024
போதை மாத்திரைகள் விற்பனை: 2 வாலிபர்கள் கைது

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக ஆணையர் கி.சங்கருக்கு இன்று ரகசிய தகவல் வந்தது. அவர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போதை மாத்திரை விற்பனை செய்த அம்பத்தூர், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (23), பார்த்திபன் (23) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1140 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 10, 2025
போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் காந்திநகர் பகுதியில் போதை மாத்திரை வைத்திருப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து சோதனை செய்த போது காந்திபுரம் பகுதியைச் சார்ந்த கமலக்கண்ணன் (22) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ய வைத்திருந்ததை தொடர்ந்து அவரிடம் இருந்து 88 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
News November 9, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (9.11.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
News November 9, 2025
திருவள்ளூர்: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுக


