News November 25, 2025
போடி அருகே பெண்ணை கடத்திய தாய் உள்ளிட்ட 7 பேர் கைது

போடி மேலச்சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்துராணி (55). இவரது மகன், தீபா (36) என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபா உள்ளிட்ட 7 பேர் இந்துராணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி, கடத்தி வெளியே செல்ல விடாமல் அடைத்து வைத்து உள்ளனர். அங்கிருந்து தப்பிய இந்துராணி அளித்த புகாரில் போடி தாலுகா போலீசார் தீபா உள்ளிட்ட 7 பேரை கைது (நவ.24) செய்தனர்.
Similar News
News January 22, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 22.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News January 22, 2026
தேனி – தேவாரம் இடையே கூடுதல் பேருந்து

தேனி மாவட்டம் பெருமாள்கவுண்டன்பட்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, தேனி – தேவாரம் இடையே கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி A.K.K. ரஜினி, கூடுதல் பேருந்து இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கான அறிக்கையை போக்குவரத்து அதிகாரிகள் இன்று நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.
News January 22, 2026
தேனி: இனி Whatsapp மூலம் ஆதார் அட்டை!

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


