News January 13, 2025

பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

image

ஒட்டன்சத்திரம் தொகுதி உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில், வளமும் நலமும் பொங்கிட, அன்பும் பண்பும் பெருகிட, கரும்பாய் இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திட, தமிழர் திருநாளாம் அனைவருக்கும் “இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என இன்று பதிவிட்டுள்ளார்.

Similar News

News November 12, 2025

திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள் விபரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நவம்பர் 11 இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனியை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,

News November 12, 2025

திண்டுக்கல்லில் தலைப்புச் செய்திகள்

image

1.பழனி தாலுகா காவல் நிலையம்: பாஸ்கரன் ஆய்வாளராக பொறுப்பேற்றார்.
2. திண்டுக்கல் மருத்துவமனை: அரசு மருத்துவர்கள் சங்கம் தர்ணா.
3. பழனி நூற்றாண்டுவிழா: கல்வி, உணவு வழங்கல் அமைச்சர்கள் பங்கேற்பு.
4. மாற்றுத்திறனாளிகள்: மாதாந்திர உதவி தொகை உயர்த்த கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.
5. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பயிற்சி வகுப்பு ஆட்சியர் சரவணன் துவக்கம்.

News November 11, 2025

சிறுமலையில் மரத்திலிருந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு!

image

திண்டுக்கல் சிறுமலை பழையூரைச் சேர்ந்த சுரேஷ் (28) அப்பகுதி தோட்டத்தில் சவுக்கு மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார். தலைக்கு ஏற்பட்ட கடும் காயம் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக உயிரிழந்தார். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!