News November 26, 2025

பைக்கில் புதுச்சேரி மதுப்பாட்டில் கடத்தி வந்த நபர் கைது

image

விழுப்புரம் மதுவிலக அமலாக்க பிரிவு போலீசார் இன்று கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த பரத் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மொத்தமாக 316 மது பாட்டில்களையும்,பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

Similar News

News January 24, 2026

விழுப்புரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

விழுப்புரத்தில் அதிரடி கைது!

image

செஞ்சி சந்தைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவர் நேற்று முன்தினம் செஞ்சி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த ஏட்டு ஸ்ரீதரிடம் தனது வங்கி கணக்கை வங்கி நிர்வாகம் முடக்கி விட்டதாக கூறினார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீதரை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அதனால் ஸ்ரீதர் உயர்அதிகாரியிடம் தெரிவிக்க செஞ்சி போலீசார் சிவகுமாரை கைது செய்தனர்.

News January 24, 2026

விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டமைப்பில் வரும் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இதில் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!