News August 22, 2025
பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் பேரூரில் அரசு ஐடிஐ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அட்வான்ஸ் சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப பணியாளா், மெக்கானிக், வயா்மேன் போன்ற பிரிவுகளுக்கு நடப்பாண்டுக்கான நேரடி சோ்க்கைக்கு 8, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேதி ஆக.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை,
வடவள்ளி, வீரகேரளம், தெலுங்குபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், இரும்பொறை, பெத்திக்குட்டை, சம்பறவல்லி, அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கா.மண்டபத்தின் ஒரு பகுதி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News January 21, 2026
கடும் நடவடிக்கை: கோவை எஸ்பி எச்சரிக்கை!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து புகாரளிக்க கட்டுப்பாட்டு அறை எண் : 94981-81212, வாட்ஸ் அப் எண் : 77081-00100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரகசியங்கள் காக்கப்படும் என, கோவை எஸ்பி கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
News January 21, 2026
கோவை அருகே விபத்து: பெண் பலி!

கோவை நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரேஷன் கடை ஊழியர் கார்த்திகா. இவர் நேற்று தனது மகன், மகள், உறவினர்கள் விக்னேஷ் ராகவ், ஜோதிகுமாரியுடன், பூச்சியூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்ப ஹரி என்பவரது ஆட்டோவில் பயணித்துள்ளனர். அதிவேகமாக சென்ற ஆட்டோ வளைவில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜோதி குமாரி உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்தனர்.


