News August 5, 2024
பேராசையில் ரூ.43 லட்சம் மோசடி

புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி. இவரை டெலிகிராம் செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணைய வழி பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதையடுத்து ரூ.23.89 லட்சத்தையும் அதன் பிறகு, மீண்டும் ரூ.18.39 லட்சத்தை அவா் முதலீடு செய்ததாகத் தெரிகிறது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 20, 2026
புதுவை தோட்டக்கலைத் துறை 50% மானியம் அறிவிப்பு

புதுச்சேரியில் தோட்டக்கலைத் துறையின் கீழ் காய்கறி (நாட்டு ரகம்/வீரிய ஒட்டு) மற்றும் மலர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகள் வாங்கும் விதைகளுக்கான செலவில் 50% மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (20.01.2026) முதல் 05.02.2026 வரை தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை) அலுவலகம், கிராமப் பகுதியில் உள்ள உழவர் உதவியகத்தில் வழங்கப்படுகின்றன.
News January 20, 2026
புதுச்சேரி கிராம வங்கியில் புதிய திட்டம் துவக்கம்

புதுச்சேரி கிராம வங்கியில் ஐஸ்வர்யம் என்ற புதிய சிறப்பு வைப்பு நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 555 நாட்களுக்கு அதிக வட்டி தரும் இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை, கிராம வங்கி தலைவர் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும்; மற்றவர்களுக்கு 7.0 சதவீதம் வட்டியும் வழங்கப்படும். இத்திட்டம் விரைவில் அனைத்து கிராம வங்கிகளும் தொடங்கப்படும் என கூறியுள்ளனர்.
News January 20, 2026
புதுச்சேரியின் பண்டையகால நகரம் பற்றி தெரியுமா?

புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு கிராமம் சோழர் காலத்தில் மீனவ கிராமமாக இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு கி.மு 200 முதல் கி.பி 200 வரை கடல் வாணிபம் நடைபெற்றதாக அகழாய்வுகள் தெரிவிக்கின்றது. இங்கிருந்து ரோம் நகரத்திற்கு கடல் வாணிபம் நடைபெற்றுள்ளது. இங்கு ரோம் அரசரின் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், ரெடகோட்டா பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இவ்விடத்தை பற்றி பிறருக்கும் பகிரவும்..!


