News November 14, 2025

பெரம்பலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 7, 2025

பெரம்பலூர் பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

பெரம்பலூர்: காவல்துறை சார்பில் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 13 இரு சக்கர வாகனம், 1 மூன்று சக்கர வாகனம், இரண்டு நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 16 வாகனங்கள். வரும் (12.12.2025) அன்று மாவட்ட ஆயுத படை வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது. வாகனம் வாங்குவோர் வருகின்ற 10,11 ஆகிய தேதிகளில் அமலாக்கபிரிவு அலுவலகத்தில் ₹500 செலுத்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2025

பெரம்பலூர்: நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராம சுற்றுவட்டாரத்தில் வனத்துறை பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று உணவு தேடி ஊருக்குள் வந்த ஒரு புள்ளிமானை நாய்கள் கடித்துக் குதறியது. மேலும் இதைக்கண்ட அப்பகுதி மக்கள் புள்ளிமானை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில்லையே உயிரிழந்தது. இந்நிலையில் கால்நடை மருத்துவர் கொடுத்த தகவலின் படி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!