News October 17, 2025

பெரம்பலூர்: மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கலெக்டர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் குறைந்த அளவு ஒளி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கும், திறந்தவெளியில், எளிதில் தீப்பற்றாத அளவுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், பட்டாசுகளை காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரையும் வெடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News November 11, 2025

பெரம்பலூர் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டி

image

பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில், ஹாக்கி மற்றும் கால்பந்து போட்டி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது. இதில் மாணவிகளுக்கான வளை பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் முகமது பட்டணம் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியின் மாணவி வெற்றி பெற்றார். அவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் விளையாட உள்ளனர்.

News November 11, 2025

பெரம்பலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 11, 2025

பெரம்பலூர்: TNPSC குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி

image

பெரம்பலூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம், TNPSC குரூப்-2 மற்றும் 2 A முதன்மைத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. வரும் நவ.12-ம் தேதி அன்று தொடங்கும் இந்த பயிற்சியில் மாதிரித் தேர்வுகள், வல்லுநர்களுடன் கலந்துரையாடல், நூலக வசதி ஆகியவை கிடைக்கும். முதன்மைத் தேர்வு எழுத தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

error: Content is protected !!