News November 19, 2024

பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றிதழ்களுடன் 29.11.2024 க்குள் மாவட்ட ஆட்சியரகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து பயனடைய வேண்டுமென கலெக்டர் நேற்று தகவல் அளித்தார்.

Similar News

News December 14, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டம், மகாளமேடு பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்று புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கோழி வளர்த்து வரும் பயனாளகளின் வீடுகளுக்கு நேற்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த ஆய்வின் பொது மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சசிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News December 14, 2025

பெரம்பலூரில் வாகனங்கள் பொது ஏலம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில், கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 நான்கு சக்கர, 1 மூன்று சக்கர மற்றும் 12 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில், ஏலம் விடப்பட்டது. மேலும் இந்த பொது ஏலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஏலம் கேட்டனர்.

News December 14, 2025

பெரம்பலூர்: தேசிய நீதிமன்றத்தில் 563 வழக்குகள் தீர்வு

image

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் சார்பில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பத்மநாபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் இதில் மொத்தம் 563 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!