News November 25, 2025

பெரம்பலூர்: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா?

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே, உங்களது போனுக்கு அடிக்கடி LOAN, CREDIT CARD, இடம் விற்பனை போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருதா ? கவலை வேண்டாம், மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியை இங்கே க்ளிக் செய்து, உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்தால் போதும், தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் முற்றிலுமாக முடக்கப்படும். SHARE பண்ணுங்க

Similar News

News January 17, 2026

பெரம்பலூர்: மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி

image

கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் (55). இவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் அறுப்பதற்காக சிறுகுடலைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டவர்கள் மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ராஜேந்திரன் உடலை மீட்டு அவர் எவ்வாறு உயிரிழந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

பெரம்பலூர்: பகுதிநேர ஆசிரியர் தற்கொலை

image

சென்னையில் கடந்த 13-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பகுதிநேர ஆசிரியர்களில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணனும் (50) ஒருவர். மன உளைச்சலில் இருந்த கண்ணன் போராட்டதின்போதே திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சக பகுதிநேர ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் கடந்த 14-ம் தேதி உயிரிழந்துள்ளார்.

News January 16, 2026

பெரம்பலூர்: சனி தோஷம் நீங்க இந்த கோயிலுக்கு போங்க!

image

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க.

error: Content is protected !!